நாகர்கோவில் செல்ல தாலி சங்கிலியை அடகு வைத்து பணம் தேற்றிய அபிராமி
Recommended Video
சென்னை: குன்றத்தூரில் குழந்தைகளை கொன்றுவிட்டு வெளிநாடு தப்பி செல்ல தாலி சங்கிலியை அடகு வைத்து பணம் தேற்றியுள்ளார் அபிராமி.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.
இதையடுத்து வெளியூருக்கு தப்பி செல்வதற்கு அபிராமியிடம் பணம் இல்லை. இதனால் கணவரையே தூக்கி எறிய துணிந்த அபிராமி தனது தாலி சங்கிலியை அடகு வைத்து பணத்தை தயார் செய்திருந்தார்.
அந்த பணத்தை எடுத்து கொண்டு கோயம்பேடு சென்ற அபிராமி பேருந்து மூலம் திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்றுவிட்டார்.
இந்த வழக்கில் குழந்தைகள் கொலை வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், கள்ளக்காதலன் சுந்தரம் 2-ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சுந்தரத்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் குழந்தைகள் இல்லை.