குழந்தைகளே போயாச்சு.. இனி நான் இருந்தால் என்ன? செத்தால் என்ன?.. விஜய்க்கு எஸ்எம்ஸ் அனுப்பிய அபிராமி
Recommended Video

சென்னை: குழந்தைகளே போயாச்சு, இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என்று கேட்டு கணவனுக்கும் உறவினர்களுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார் குன்றத்தூர் அபிராமி.
குன்றத்தூர் அகஸ்தீஸ்வரர் கோவில் தெருவில் வசிப்பவர் விஜய் (30). சென்னையில் தனியார் வங்கியில் கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் பணியாற்றுகிறார்.
இவருடைய மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா ஆகிய குழந்தைகள் இருந்தனர்.

பைக் இல்லை
இந்நிலையில் விஜய்க்கு வங்கியில் நிலுவை பணிகள் இருந்ததால் அவர் நேற்று முன் தினம் இரவு வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவர் நேற்று அதிகாலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் வெளியே அபிராமியின் இரு சக்கர வாகனம் இல்லாததால் அவர் எங்கேனும் வெளியே சென்றிருக்கலாம் என நினைத்தார்.

வெளிப்பக்கம்
பின்னர் நீண்ட நேரமாகியும் வராததால் அவரது தாய் வீட்டுக்கு சென்று கேட்டார். அங்கு அவர் வரவில்லை என்றதும் சந்தேகமடைந்த விஜய், மீண்டும் வீட்டுக்கு சென்ற போது கதவு வெளிப்பக்கமாக சாத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து உள்ளே போன விஜய் குழந்தைகள் சடலமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.

கணவருக்கு எஸ்எம்எஸ்
இதையடுத்து சிறிது நேரத்தில் விஜய்க்கும் அவரது உறவினர்களுக்கும் அபிராமியின் செல்போனில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. அதில் என் குழந்தைகளே போய்விட்டனர். இனி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன என கேட்டிருந்தார்.

கோயம்பேட்டில் சிக்னல் கட்
இதையடுத்து எதற்காக இப்படி செய்தாய் என கேட்டு விஜய், அபிராமிக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார். ஆனால் அதற்கு அவர் பதில் அனுப்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அபிராமியின் செல்போன் சிக்னல் கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. இதைவைத்து இருசக்கர வாகனத்தை கோயம்பேட்டில் விட்டு விட்டு அபிராமி வெளியூர் தப்பியிருக்கலாம் என யூகித்தனர்.

நாகர்கோவிலில் கைது
இதனிடையே அவருக்கு சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்ததை விஜய் போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து குன்றத்தூர் பிரியாணி கடையில் வேலைபார்க்கும் சுந்தரத்தை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் அபிராமி நாகர்கோவில் அல்லது புதுச்சேரி செல்வதாக கூறியிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து நாகர்கோவிலில் இருந்த அபிராமியை போலீஸார் கைது செய்தனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications