நெல்லை அருகே வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு
நெல்லை: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆம்னி வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர்கள், ஆம்னி வேனில் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். சுற்றுலாவை முடித்து நள்ளிரவு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த வெள்ளாளன்குளம் என்ற வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி, ஆம்னி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.
இது குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பலியானவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.












Click it and Unblock the Notifications