விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது ஆம்னி பஸ் மோதல்..3பேர் பலி..திருச்சி அருகே சோகம்
பெரம்பலூர்: சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது தனியார் ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
திருச்சி அருகே உள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் நள்ளிரவு ஏற்பட்ட சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற ஆம்புலன்ஸ் மீது தனியார் ஆம்னி சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-

திண்டுக்கல்லை சேர்ந்த நாகசாமி என்பவர் தனது உறவினர்களுடன் திருவண்ணாமலைக்கு வேனில் சென்றார். பின்னர் அவர்கள் திருவண்ணாமலையில் இருந்து மீண்டும் திண்டுக்கல்லுக்கு வேனில் திரும்பி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்துகொண்டிருந்தது.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டரை முந்த முயற்சி செய்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையின் நடுவே உள்ள செண்டர் மீடியனின் ஏறி நின்றது. இந்த விபத்தில் டிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் , டிராக்டரை ஓட்டி வந்த சாமிதாஸ் என்பவரும் அவருடன் சென்ற சேகர் என்பவரும் படு காயம் அடைந்தனர். பயணிகள் வேனில் வந்தவர்களும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்து ஆம்புலன்ஸ் காயம் அடைந்தவர்களை ஏற்றிக்கொண்டு இருந்த போது , அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் குப்புசாமி மற்றும் அவரது பேத்தி கவிப்ரியா, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜேந்திரன் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications