Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வக்கீல் மூக்கை உடைத்து சந்தானம் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டார் - நடிகர் ஆர்யா

நடிகர் சந்தானம் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டார் என நடிகர் ஆர்யா தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடி கொடுத்த சந்தானத்துக்கே கையில் காயம் ஏற்பட்டு விட்டது என்றால் அடி வாங்கியவரின் நிலை என்னவாகியிருக்கும் என்று ஆர்யா கூறியுள்ளார்.

நகைச்சுவை நடிகர் சந்தானம், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இன்னோவேட்டிவ் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்துடன் சேர்ந்து முன்றாம் கட்டளையில் திருமண மண்டபம் கட்டுவதற்காக ரூ. 3 கோடி முன்பணம் கொடுத்ததாக தெரிகிறது.

Actor Arya attacks Actor Santhanam in a function

பணத்தை பெற்று கொண்ட நிறுவனத்தின் மேலாளர் சண்முக சுந்தரம் 3 ஆண்டுகளாக மண்டபத்தை கட்டிக்கொடுக்கவில்லை. சண்முக சுந்தரத்துடன் சந்தானம் வாய்த்தகராறில் ஈடுபட்டார். அந்த சமயம் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் சண்முக சுந்தரத்துக்கு ஆதரவாக பேசினார்.

அப்போது பிரேம் ஆனந்தை சந்தானம் அடித்துள்ளார். இதனால் அவர் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. நடிகர் சந்தானத்தால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் பாஜக தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவராகும். தகவல் அறிந்ததும், பாஜகவினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர்.

இதையடுத்து சந்தானம் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார். இந்நிலையில் சக்கை போடு போடு ராஜா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா கூறுகையில், நடிகர் சந்தானம் படத்திலும் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் ஹீரோதான். அடி கொடுத்த சந்தானத்துக்கே கையில் காயம் ஏற்பட்டு விட்டது என்றால் அடி வாங்கியவரின் நிலை என்னவாகியிருக்கும் என்றார் ஆர்யா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+