கருப்பு வெள்ளை காலம் தொட்டு, தமிழ் சினிமாவின் எவர்கிரீன் காதல் மன்னன் கமல் ஹாசன்!
கருப்பு வெள்ளை திரைப்பட காலம் தொட்டே கமல் ஹாசன் ஏதாவது ஒரு நடிகையுடன் கிசுகிசுக்கப்பட்டு வந்துள்ளார். காதல் சுரப்பி அவரின் அங்கங்களில் அதிகம் என்பது கலைஞர்கள் கருத்து.
சென்னை: பெரும்பாலான கலைஞர்கள் காதலில் மன்னர்களாகவே இருப்பார்கள். கலா ரசனையுடன் வாழ்க்கையை அணுகுவதால் கிடைக்கும் லாபம் அது. அவர்களுக்கு காதலும் ஒரு உன்னத கலைதான்.
பிறவி கலைஞர் என புகழப்படும் கமல்ஹாசனும் அந்த காதல் கலையில் கை தேர்ந்தவர். பிளாக் அன்டு ஒயிட் திரைப்பட காலத்தில் இருந்தே கமலையும், காதலையும் பிரித்து பார்க்க முடியாது. அவர் பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

முதலில் இவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை ஸ்ரீ வித்யா. அவர் கமலை விட வயதில் பெரியவர் என்பதால் இவர்களது காதல் கை கூடவில்லை என்ற பேச்சு உண்டு. இருவரும் இணைந்து தமிழ், மலையாள படங்கள் பலவற்றில் நடித்து, அத்தோடு அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.
இதன்பிறகு, பரத நாட்டிய நடன கலைஞர் வாணி கணபதியுடன் காதல் கொண்டார் கமல். இருவரும் நடனத்தில் கைதேர்ந்தவர்கள் என்பதால் நர்த்தனம் புரிந்தனர். கமலுக்கு திருமண உறவில் நம்பிக்கை இல்லாததால் திருமணம் செய்யாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறையை தமிழகத்தில் அறிமுகம் செய்தார். ஆனால் வாணி கணபதியோ பாரம்பரிய வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர். திருமணம் செய்ய வாணி கணபதி நெருக்கடி கொடுத்ததால் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
இந்நிலையில்தான், பாலிவுட் படங்களில் பிசியானார் கமல். அப்போது அறிமுகமானார் குஜராத்தை சேர்ந்த நடிகை சரிகா இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் செய்துக் கொள்ளமல் வாழ்ந்து வந்தனர். இருவரின் காதல் வாழ்க்கைக்கு பரிசாக ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு பெண் குழந்தைகளை பெற்றெடுத்தப் பின் உறவினர்கள் வலியுறுத்தலால் திருமணம் செய்துக் கொண்டனர்.
கவுதமிக்கு முன்பாக, கமலுடன் கடைசியாக கிசுகிசுக்கப்பட்ட நடிகை சிம்ரன். பஞ்சதந்திரம், பம்மல் கே சம்மந்தம் போன்ற படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்தார் சிம்ரன். கமலை விட 22 வயது இளைய சிம்ரன் கமலுடன் நெருக்கமான உறவில் இருந்ததாக வெளியான தகவலால், 14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த கமல்-சரிகா ஜோடி பிரிந்தது. கடந்த 2004ம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றனர். இதனிடையே சிம்ரன் வேறு ஒருவரை மணந்தார்.
அதன் பின்னர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த கௌதமிக்கு ஆதரவாக இருந்து அவரை தாலிகட்டாத வாழ்க்கை துணையாக ஆக்கிக் கொண்டார். தேவர்மகன், குருதி புனல் போன்ற படங்களில் நடித்த போதே இருவருக்கும் இடையே இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், அதுவே தாமதமாக காதலாக மாறியதாகவும் கூறிக்கொண்டனர் இருவரும். இந்நிலையில்தான், 13 வருடங்களுக்கு பிறகு இவ்விரு ஜோடியும் பிரிந்துள்ளது.
வாணி கணபதி, சரிகா ஆகியோரை நான் திருமணம் செய்து கொண்டேன். எனக்கு பிடித்தவர்களின் ஆசையை நிறைவேற்ற நான் செய்த முட்டாள்தனமான செயல்தான் திருமணம். நான் செய்து கொண்ட ஒரு சமரசம் அது. நான் விரும்பிய பெண்ணுடன் இருக்க நான் கொடுத்த விலைதான் திருமணம், என்று முன்பு ஒருமுறை கமல் கூறியிருந்தார். இந்த வெளிப்படைத்தன்மைதான் கமல்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications