நிஜவாழ்க்கையில் ஹீரோயிசம் வேண்டாம்... ரயில்பயணிகளிடம் பேசிய கார்த்தி
சென்னை: ஹீரோயிசம் சினிமாவுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
நிஜ வாழ்க்கையில் குறிப்பாக ரெயில் பயணத்தில் ஹீரோயிசம் காட்டவேண்டாம் என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார். செல்போனில் பேசியபடி, விளையாடியபடி கவனக்குறைவு ரயில்பாதையை கடக்கவேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது, படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது என்பன உள்பட பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நடிகர் கார்த்தி
ரயில்வே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டு பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பயணிகளிடம் வழங்கினார்.

கார்த்தி கையெழுத்து
தெற்கு ரயில்வே சார்பில் சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் அனுபம் ஷர்மா மாதிரி ரயில் பெட்டியை கார்த்திக்கு வழங்கினார். பின்னர் பாதுகாப்பான பயணம் செய்வேன் என்ற உறுதிமொழி அடங்கிய பதாகையில் கார்த்தி தனது கையெழுத்தினை போட்டார்.
இதனைத்தொடர்ந்து ரயில் பயணிகளும் பதாகையில் கையெழுத்திட்டனர்.

ரயில் பயணம்
பயணிகள் முன் பேசிய கார்த்தி, ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏ.சி. காரில் செல்வதை விடவும் ரயிலில் செல்வதைதான் நான் அதிகம் விரும்புவேன் என்று கூறினார்.

மறக்கமுடியாத பயணம்
ரயில் பயணிகளாகிய உங்களை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருக்கிறது. நான் கல்லூரி மற்றும் வேலைக்கு சென்ற சமயங்களில் ரயில் சேவைகளை அதிகம் பயன்படுத்தியிருக்கிறேன். அந்த தருணத்தை எளிதில் மறந்துவிடமுடியாது.

பாதையில் கவனம்
சிலர் செல்போனில் பேசியபடி, விளையாடியபடி கவனக்குறைவு காரணமாக ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர். இவ்வாறு செல்பவர்கள் ரயில் மோதி மரணம் அடைகின்றனர். இறப்பவர்களை விடவும் அவர்களின் குடும்பத்தினருக்குத்தான் அதிக சுமை ஏற்படுகிறது.

ஹீரோயிசம் வேண்டாம்
‘ஹீரோயிசம்' சினிமாவுக்கு பொருத்தமானதாக இருக்கும். நிஜ வாழ்க்கையில் குறிப்பாக ரயில் பயணத்தில் ‘ஹீரோயிசம்' காட்டவேண்டாம். பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல முடியாதவாறு சுற்றுச்சுவர் அமைத்தல் உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே மேற்கொண்டுவருகிறது. ரயில்வேக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவர்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை தொடருங்கள் என்றும் கார்த்தி கூறினார்.

குறும்படத்தில் கார்த்தி
நடிகர் கார்த்தி நேரடியாக வந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கேற்றது மட்டுமல்லாது ரயில் பயணிகள் பாதுகாப்பு பற்றிய குறும்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் படிக்கட்டில் பயணம் செய்வது கூடாது என்றும் செல்போனில் பேசியபடி இருப்புப்பாதையை கடக்கக் கூடாது என்றும் பல்வேறு அறிவுரைகளை கார்த்தி கூறியுள்ளார். இந்த குறும்படம் இனிவரும் நாட்களில் தியேட்டரில் ஒளிபரப்பாகும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications