பெரியார் என்னெல்லாம் சொன்னாரோ, அதையெல்லாம் செய்தவர் கருணாநிதி.. கார்த்தி புகழாரம்
கருணாநிதி சமாதியில் நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video

சென்னை: பெரியார் என்னெல்லாம் சொன்னாரோ, அதையெல்லாவற்றையும் தனது ஆட்சியில் செய்து காட்டிய கருணாநிதி என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை அடக்கம் செய்து 3 நாள் ஆகிறது. ஆனாலும் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த தொண்டர்களும், பொதுமக்களும், பிரபலங்களும் குவிந்து வருகிறார்கள். தங்களுக்கு மனதில் தங்கிவிட்ட மூத்த தலைவரை மறக்க முடியாமல், அவரை தேடி மெரினாவில் தொடர்ந்து படையெடுத்து வருகிறார்கள் தமிழ் உள்ளங்கள்.

இதில் திரைப்பிரபலங்கள், கருணாநிதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாலும், மீண்டும் மெரினா சென்று தங்கள் கண்ணீர் வணக்கங்களை தெரிவித்து விட்டு வருகின்றனர். நேற்றுகூட த்ரிஷா சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தார்.
அதன்படி, இன்று நடிகர் கார்த்தி மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து துக்கம் விசாரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, தந்தை பெரியார் என்னவெல்லாம் சொன்னாரோ, அவற்றை எல்லாம் ஆட்சியை அமைத்து செய்து காட்டியவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.
சின்ன சின்ன கிராமங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் நினைவிடத்துக்கு வந்து கொண்டே இருப்பது அவரது சாதனையைதான் காட்டுகிறது என்று தெரிவித்த கார்த்தி, இங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் கருணாநிதியால் பலன் அடைந்திருப்பவராக இருப்பார்கள் என்றார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தங்களை செய்த கருணாநிதியின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று என்று கார்த்தி கூறினார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications