வீட்டை விட்டு விரட்டப்பட்டாரா நடிகர் கார்த்திக்?.. திரையுலகில் பரபரப்பு!
சென்னை: நடிகர் கார்த்திக் சொத்துப் பிரச்சினை காரணமாக விட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை வீட்டை விட்டு விரட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலீஸிலும் கார்த்திக் புகார் கொடுத்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. கார்த்திக்கின் நிலைமை குறித்து திரையுலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கார்த்திக் வீட்டை விட்டு வந்து விட்டதாக பேச்சு இருந்தது. இருப்பினும் தற்போதுதான் கார்த்திக் மூலம் அது உறுதியாகியுள்ளது. நேற்று இரவு தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்த கார்த்திக் தனது சொத்துப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக் கோரி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மறைந்த நடிகர் முத்துராமனின் மகன்தான் கார்த்திக். இவருக்கு இரண்டு மனைவியர், இருவரும் சகோதரிகள். பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படம் மூலம் நடிகரான கார்த்திக் சிறந்த நடிகராக வலம் வந்தவர்.
மெளன ராகம் கார்த்திக்கின் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்திய படங்களுள் ஒன்று. பல்வேறு படங்களில் நடித்துள்ள கார்த்திக்கின் மகன் கெளதமும் தனது தாத்தா, தந்தை வழியில் நடிகராகி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், கார்த்திக்கின் குடும்பத்துக்கும், அவருக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டது. நீண்ட காலமாக இருந்து வரும் இந்தப் பிரச்சினையால் கார்த்திக் பெரும் கஷ்டத்துக்குள்ளானார். அவரது கையில் ஒரு சொத்து கூட இல்லாத நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது இருந்த வீட்டையும் கூட கார்த்திக் இழந்திருப்பதாக தெரிகிறது. அவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு குடும்பத்தினர் கூறி விட்டதாக சொல்கிறார்கள். அவரும் வெளியே வந்து விட்டார். தற்போது தனியாக தங்கியுள்ளார்.
நேற்று இரவு தேனாம்பேட்டை காவல் நிலையம் சென்ற கார்த்திக், தனது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்குமாறு கோரி புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரைப் பெற்ற போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.
இவ்வளவு பிரபலமாக இருந்தும், திரையுலகம் முழுவதும் நண்பர்களைக் கொண்டிருந்தும் கூட கார்த்திக்குக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பது அவரது ரசிகர்களை மட்டுமல்ல திரையுலகினரையே கூட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
என் வாழ்க்கையே முடிஞ்சிடுச்சுனு நினைத்தேன்! அந்த நொடி நடந்த சம்பவம்.. நடிகர் முனிஷ்காந்த் உருக்கம்! இது பலருக்கு பாடம் -
ராதிகாவுக்கு வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் செய்த நயன்தாரா.. ஷூட்டிங்கில் நடந்த சம்பவம், உருக்கமான போஸ்ட் -
நடிகைகளை ஹோட்டல் சாப்பாடோடு ஒப்பிட்ட சிவகுமார்.. வரிந்து கட்டிய ப்ளூ சட்டை மாறன்! ஜோதிகாவை வைத்து செக்! -
யூத் படத்திற்கு வந்த பெரிய பிரச்சனை.. ஒரு பாடலால் வந்த வினை! கானா பாடகர் கொடுத்த புகார்! சிக்கலில் கென் கருணாஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
சிம்பு பற்றி நடிகை யோகலட்சுமி போட்ட ஒரே போஸ்ட்.. இப்போ சோசியல் மீடியாவே அதிருது.. தரமான சம்பவம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு












Click it and Unblock the Notifications