கலவர பூமியான நடிகர் சங்க மைதானம்: நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைப்பு
சென்னை: நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் நடக்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலின்போது நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
நடிகர் சங்க பொதுக் கூழு கூட்டம் பல பிரச்சனைகளுக்கு இடையே பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் சங்க மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு துவங்கியது.
கூட்டத்தில் கலந்து கொள்ள அடையாள அட்டை இல்லாமல் வந்த உறுப்பினர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சங்க உறுப்பினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
மோதல் அதிகரித்ததால் நடிகர் சங்கத்தின் நுழைவாயிலை போலீசார் இழுத்து மூடினர். அடையாள அட்டை இல்லாமல் கூட்டத்திற்கு வந்தவர்களை போலீசார் வெளியேற்றி வருகிறார்கள்.
#NadigarSangam general body meet, violence erupts as rival groups clash, #Karunas car attacked pic.twitter.com/XTPblNsn08
— Sreedhar Pillai (@sri50) November 27, 2016
இதற்கிடையே சங்க வளாகத்திற்கு அருகில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. கார் கண்ணாடியை உடைத்தவர்களை கைது செய்யக் கோரி கருணாஸின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இந்த சம்பவத்தால் நடிகர் சங்க வளாகப் பகுதி கலவர பூமி போன்று காட்சியளிக்கிறது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.