For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினியை திடீரென சந்தித்த நடிகர் கருணாஸ்... ஏன், எதற்காக??

சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நடிகர் கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளது, தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By Vazhmuni
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏவும் ,நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளது, தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் அதிமுகவின் சசிகலா அணியில் இருந்து வருகிறார்.

Actor Karunas meets the Rajinikanth at his residence

கூவத்தூர் முகாமில் தங்கியிருந்தவர். அதுதொடர்பாக பல சர்ச்சைகளிலும் சிக்கியவர். இதனால் மக்களின் எதிர்ப்பால் தனது திருவாடனை தொகுதியில் கடும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

சமீபத்தில்தொகுதிக்குப் போனபோது தொகுதி மக்கள் இவரை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். செருப்பும் வீசப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்தை நடிகர் கருணாஸ் சந்தித்து பேசியுள்ளது தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்தை சந்தித்து பேசிய பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் கூறுகையில்,

ரஜினிகாந்தை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் . தமிழக அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை.

நவீன தொழில் நுட்பத்தில் 21 ஆண்டுகளுக்கு பிறகு பாட்ஷா திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துக் கூறினேன். மேலும் ரஜினியை நிறைய பிடிக்கும் என்பதால் சந்தித்தேன்.

ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை தேவையற்றது என்றும் விசாரணை கேட்பது மக்களை ஏமாற்றும் செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

English summary
Actor Karunas met the Superstar Rajinikanth at his residence. In the meet, karunas wished Rajini for his baasha movie which converted into digital format.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X