மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகர் லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்கு நடிகர் லாரன்ஸ ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அவர் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
சென்னை: தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நடிகர் லாரன்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விரைவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த அனுமதிக்கோரி தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கடும் குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை மெரினா கடற்கடையில் 24 மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் முழக்கமிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்று காலை நேரில் சந்தித்த நடிகர் லாரன்ஸ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். தமிழகத்தில் விரைவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications