சமூக வலைதளங்களில் அவதூறு.. சி.ஆர்.சரஸ்வதியை தொடர்ந்து கமிஷனர் ஆபீஸில் நடிகர் கருணாஸ் புகார்

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அதிமுக நடிகர் கருணாஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதில் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஓபிஎஸ் அணி சசிகலா அணி என உடைந்ததை தொடர்ந்து பலர் ஓபிஎஸ் அணிக்கு மாறினர். அப்போது சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்தவர்களை பொதுமக்கள் சமூக வலைதளங்களில் சரமாரியாக வசைபாடினர்.

http://jupiter.greynium.com/index.php?module=article&class=ArticleManagement&action=add

செல்போனுக்கும் தொடர்பு கொண்டு ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுக்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பாக சிஆர்.சரஸ்வதி உட்பட அதிமுக பிரபலங்கள் பலர் போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலா ஆதரவு எம்எல்ஏவான நடிகர் கருணாஸ் சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+