கமல்ஹாசனுடன் கூட்டணி இல்லை... தனிவழியில் பயணம்... ரஜினி சூசகம்?
நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி இல்லை... தாம் தனித்தே அரசியலில் பயணிக்கப் போகிறேன் என்பதை சிவாஜி கணேசன் மணி மண்டபத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்தார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனுடன் கூட்டணி இல்லை... தாம் தனித்தே அரசியலில் பயணிக்கப் போகிறேன் என்பதை சிவாஜி கணேசன் மணி மண்டபத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் சூசகமாக தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கடந்த மே மாதம் கூறியிருந்தார். மேலும் அரசியலுக்கு வருவதற்கான அனைத்து பணிகளையும் ரஜினிகாந்த் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துவிட்டது என்று கூறியிருந்தார். அத்துடன் அரசியலுக்கு வந்து தனி கட்சி தொடங்குவது உறுதி எனவும் கூறியிருந்தார்.
|
முன்னால் ஓடிவிடாதே
கமல்ஹாசன் பொதுவாக அரசியல் தொடர்பான கருத்துகளை டுவிட்டரில் தெரிவித்து விடுவார். தம்முடைய ட்விட்டரில் முன்னுக்கு ஓடி விடாதே, கூடி நடந்து செல் என்று கமல் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அது ரஜினியை குறிப்பதாக விமர்சிக்கப்பட்டது.
ரஜினி குறித்து கமல் பேச்சு
அத்துடன் முரசொலி பவளவிழாவில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், தற்காப்பை விட தன்மானம் முக்கியம் என கூறியிருந்தார். இது ரஜினியை மனதில் வைத்து கமல்ஹாசன் பேசியதாகவும் கூறப்பட்டது.
ரஜினி பேச்சு
இந்நிலையில் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசுகையில் , அரசியலில் வெற்றி பெற பணம், புகழ், பெயர் மட்டும் போதாது. அரசியலில் வெற்றி அடைய என்ன தேவை என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும். அது எனக்கு சத்தியமாக தெரியாது.
அரசியல் தொடர்பாக ரஜினி பேச்சு
ஒரு வேளை வெற்றியின் ரகசியம் கமலுக்கு தெரிந்திருக்கலாம். அதை கேட்டாலும் அவர் இப்போது சொல்லமாட்டார். ஒரு வேளை ஒரு 2 மாதங்களுக்கு முன்னால் கேட்டிருந்தால் சொல்லியிருப்பாரோ என்னவோ. திரையுலகில் மூத்த அண்ணன் நீங்கள், நான் உங்கள் தம்பி எனக்கு இந்த ரகசியத்தை சொல்லுங்கள் என்றால் நீ கூடவா சொல்கிறேனு சொல்கிறார் என்றார் ரஜினி.
ரஜினியின் சூசக பேச்சு
கமலின் டுவீட்டை மனதில் வைத்தே ரஜினி இப்படி பேசியதாக கூறப்படுகிறது. மேலும் கமலுடன் கூட்டணி சேர ரஜினி தயாராக இல்லை என்பதையும் இது வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.