ரஜினி அரசியலுக்கு வருவது 'கன்பார்ம்'.. மூத்த பத்திரிகையாளர்கள், எடிட்டர்களுடன் தீவிர ஆலோசனை
சென்னை: அரசியலுக்கு வருவதற்கு ரஜினி ஆயத்தமாகிவருவது உறுதியாகிவிட்டது. ரஜினியின் நண்பர் பத்திரிகையாளர் சோ மறைந்துவிட்ட நிலையில், தற்போதுள்ள சீனியர் பத்திரிகையாளர்கள் பலருடன் ரஜினி இதுகுறித்து கருத்து கேட்டு வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்ட மற்றும், திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், ரஜினிக்கு அரசியல் ஆசை துளிர்த்துள்ளது.
திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுத்தபோது வாழ்த்திய ரஜினிகாந்த், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுத்தபோது வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமே திரண்டிருந்தபோது, வார இதழ் ஒன்று நடத்திய விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், ஜல்லிக்கட்டை முறைப்படுத்தலாமே தவிர தடை செய்ய கூடாது என்று 'வாய்ஸ்' கொடுத்தார். அப்போதே அவர் அரசியலுக்கான அச்சாரத்தை போட ஆரம்பித்திருந்தார்.

தொடர்ச்சியாக ஆலோசனை
நக்கீரன் கோபால் போன்ற சில பத்திரிகையாளர்களுடன் அவர் ஆலோசனைகளை நடத்தி வந்தார். கள நிலவரங்கள் எப்படி உள்ளன என்பது பத்திரிகையாளர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களிடம் தொடர்ச்சியாக அவர் கருத்து கேட்டு வந்தார்.

விரிவடைந்த ஆலோசனை
இந்த நிலையில், இப்போது தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர் வட்டத்தையும் தாண்டி, பல்வேறு தொலைக்காட்சி சேனல்களின் எடிட்டர்களை தனது வீட்டுக்கே அழைத்து, தனது அரசியல் திட்டம் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

எடிட்டர்களுடன் ஆலோசனை
தமிழகத்தின் மிக நீண்ட கால பாரம்பரியம் கொண்ட ஒரு நாளிதழின் ஆசிரியருடன் ரஜினி ஆலோசித்துள்ளார். இதேபோல முன்னணி செய்தி தொலைக்காட்சி சேனல்களில் எடிட்டர்களாகவும், விவாத நிகழ்ச்சியை நடத்துபவர்களாகவும் உள்ள இருவரையும், மற்றொரு தொலைக்காட்சி சேனலின் இணை செய்தி ஆசிரியர் ஆகியோரையும் ரஜினி சந்தித்துள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி
இதேபோல சில நாட்கள் முன்பு, நக்கீரன் கோபாலுடன் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். கள நிலவரத்தை அறிவதோடு மட்டுமின்றி, ஊடகங்கள் மக்களிடம் பொதுக் கருத்தை உருக்குபவை என்பதும் எடிட்டர்களுடனான இந்த சந்திப்புக்கு முக்கிய காரணம். எனவே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள்.

அரசியல் விஐபிகள்
அடுத்ததாக, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தலைமையில் பணியாற்றிய முன்னாள் அமைச்சர், ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்ட அரசியல் விஐபிகளை சந்தித்து, புதுக்கட்சியை துவக்குவதற்கான ஆலோசனை பெறுவதற்கு ரஜினி ஆயத்தமாகி வருகிறாராம். பத்திரிகையாளர்களில் பெரும்பாலானோர் ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்தால், தனிக்கட்சி தொடங்குவதே சரியானதாக இருக்கும் என அறிவுரை கூறியுள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக!












Click it and Unblock the Notifications