ஞாநியின் உடலுக்கு ரஜினிகாந்த், பார்த்திபன் அஞ்சலி #GnaniSankaran
Recommended Video
சென்னை : மறைந்த மூத்த பத்திரிகையாளர் ஞாநியின் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறும்போது, ஞாநி என் நண்பர்; நான் அவரது ரசிகர். வெளிப்படையாக எழுதவும், பேசவும் கூடிய ஆற்றல் படைத்தவருமான ஞாநியின் மறைவு தனக்கு வருத்ததை அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், ஞாநியின் உடலுக்கு நடிகர் பார்த்திபன், ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல தலைவர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.