அரசியலுக்கு வரத்தேவையில்லை.. ரஜினிகாந்துக்கு கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் அட்வைஸ்!
ரஜினி காந்த் அரசியலுக்கு வரத்தேவையில்லை என நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
திருச்சி: ரஜினி காந்த் அரசியலுக்கு வரத்தேவையில்லை என நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவர் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கவுதம் கார்த்திக், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளார். அவர் என்றும் நடிகராகவே இருக்க வேண்டும் என்றும் கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் எப்போதும் திரையுலக சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் சார்ந்த குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் அவர் நடிகர் கவுதம் கார்த்திக் கூறினார்.
நடிகர் கார்த்திக்கின் மகன் நடிகர் கவுதம் கார்த்திக். நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.