நடிகர் ரஞ்சித் ஓபிஎஸ்க்கு ஆதரவு.. திமுக, மதிமுக,தீபா பேரவையை சேர்ந்த சிலரும் ஓபிஎஸ் அணியில் ஐக்கியம்
சினிமா நடிகர் ரஞ்சித், தி.மு.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் சிலரும், ஜெ.தீபா அணியில் இருந்த சிலரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னை: சினிமா நடிகர் ரஞ்சித் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தி.மு.க., ம.தி.மு.க. நிர்வாகிகள் சிலரும், ஜெ.தீபா அணியில் இருந்த சிலரும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்துள்ளனர். மேலும் தண்டையார்பேட்டையில் உள்ள பார்வையற்றோர் பள்ளி மாணவ-மாணவிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஓபிஎஸை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டாக பிரிந்ததைதொடர்ந்து பலரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து அவரது அணியில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக, மதிமுக மற்றும் தீபாவின் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்தனர். முன்னதாக தண்டையார் பேட்டை பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோருடன் முன்னாள் டிஜிபி திலகவதி ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு வந்தார்.
Visually and physically challenged people from RKnagar extended their warm support. pic.twitter.com/m3gErWxwyR
— O Panneerselvam (@OfficeOfOPS) March 21, 2017
அப்போது மாணவ, மாணவிகள் ஓபிஎஸை சந்திக்க ஆசைப்பட்டதால் அழைத்து வந்ததாக திலகவதி கூறினார். இதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications