இந்த தேசம் தகுதியுள்ள நல்ல மருத்துவரை இழந்து விட்டது.. சிவகார்த்திகேயன் கண்ணீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனிதா மறைவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், விஷால் போன்றோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த், கமல் போன்ற சீனியர் நடிகர்கள் அனிதாவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், சிவகார்த்திகேயனும் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்,

"இந்த தேசம் 'தகுதி'யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது...என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி " என்று தெரிவித்துள்ளார்.
இந்த தேசம் 'தகுதி'யுள்ள ஒரு நல்ல மருத்துவரை இழந்து விட்டது...என் தங்கைக்கு கண்ணீர் அஞ்சலி #RipAnitha
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 1, 2017
மக்கள் எல்லாவற்றையும் சகித்துகொள்வார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள், அனிதாவின் தற்கொலைக்கு பிறகாவது திருந்த வேண்டும் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications