நில மோசடிப் புகார்: திண்டுக்கல் கோர்ட்டில் மனைவியுடன் நடிகர் சந்திரசேகர் சரண்
திண்டுக்கல்: நில மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வாகை சந்திரசேகர், தனது மனைவியுடன், திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்து, பின்னர் ஜாமீன் பெற்றார்.
ஈரோடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியையாகப் பணிபுரியும் கௌசல்யா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், எனது தந்தை குமரவேலுக்குச் சொந்தமான 3.15 ஏக்கர் நிலம், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த மாலையக்கவுண்டன்பட்டியில் இருந்தது. இதில், 2.97 ஏக்கர் நிலத்தை எனக்கும், சகோதரிகள் வித்யா, ரம்யா ஆகியோர் பெயர்களிலும் மாற்றிக் கொடுத்தார்.

இந்த நிலையில், திமுக செயற்குழு உறுப்பினரும், நடிகருமான வாகை சந்திரசேகர், அவரது மனைவி ஜெகதீஸ்வரி, கோவையைச் சேர்ந்த சுப்பம்மாள், மாலையக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பாப்பம்மாள் உள்ளிட்ட 11 பேர் கூட்டாகச் சேர்ந்து அந்த நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, பாகீரதன் என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர்.
எனவே, போலி ஆவணம் மூலம் மோசடியாக நிலத்தை விற்பனை செய்த 11 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் நில அபகரிப்புப் பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் 11 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டது.
இதில், சுப்பம்மாள், பாப்பம்மாள், பத்திர எழுத்தர் முருகபாண்டி ஆகிய 3 பேரையும், கடந்த ஜூன் 21-ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யாமல் இருக்கும் வகையில், வாகை சந்திரசேகரும், அவரது மனைவி ஜெகதீஸ்வரியும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன்மீது விசாரணை, திண்டுக்கல் நீதிமன்றத்தில் நடந்தது.
அங்கு, மனைவி ஜெகதீஸ்வரியுடன், வாகை சந்திரசேகர் திண்டுக்கல் 2-ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார். மாவட்ட நில அபகரிப்புப் பிரிவில், நாள்தோறும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications