அனிதா மரணம்: மக்கள் மறந்துவிடுவார்கள் என அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்தனும்- விஷால்

அனிதா உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாகவும், தன்னை ஒரு சகோதரனாக நினைத்து மாணவர்கள் அணுகினால் படிப்புக்குத் தேவையான உதவிகளை செய்து தரத் தயாராக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டதை கேட்டு மனவேதனை அடைந்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

Actor Vishal expresses condolences for Anitha's family

இதுகுறித்து நடிகர் விஷால் தெரிவிக்கையில், நீட் தேர்வு முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தவறான முடிவு எடுக்கக் கூடாது. தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டதை கேட்டு மனவேதனை அடைந்தேன்.

என்னை ஒரு சகோதரனாக நினைத்து மாணவர்கள் அணுகினால் படிப்புக்குத் தேவையான உதவிகளை செய்து தரத் தயாராக உள்ளேன். மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்.

தமிழக மாணவ, மாணவிகள் பாதிக்காத வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+