காவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது... சொல்றது விஷால்!
காவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Recommended Video

திண்டுக்கல் : காவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் குரல் கொடுத்தால் நல்லது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஏன் நமக்குரிய பங்கை தர கர்நாடகா மறுக்கிறது என்று இருவரும் கேள்வி எழுப்ப வேண்டும், ஆனால் அவர்கள் ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்கமுடியாது, ஏனெனில் இது அவரவர் விருப்பம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்குமாறு தமிழக அரசு கர்நாடக அரசு பல அழுத்தங்களைத் தந்து வருகிறது. இது தொடர்பாக நேரில் சந்தித்து தமிழகத்தின் நிலைமையை எடுத்துக் கூற நேரம் ஒதுக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. ஆனால் இந்த கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை.
மாறாக கர்நாடகாவில் வறட்சி நிலவுவதால் காவிரி நீர் தர முடியாது என்று அந்த மாநில நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் கூறியுள்ளார். தமிழக முதல்வர் கர்நாடக முதல்வரை சந்திக்கும் போது இதே கருத்து முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

போராடும் தமிழகம்
இந்நிலையில் கபினி அணையில் போதுமான நீர் இருப்பதால் காவிரி டெல்டா பாசனத்தை காப்பாற்ற தேவைப்படும் 8 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பங்காக கர்நாடகா வழங்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழகத்திற்கான நீரை தர மறுக்கும் கர்நாடகாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சுப்ரமணியன் சாமியால் சர்ச்சை
இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் வேண்டுமானால் ஏற்பாடு செய்து கொடுக்கலாம். ஆனால் காவிரி நீர் கிடைக்காது. சும்மா நாடகம் ஆடுகிறார்கள். கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு கொடுக்கலாம் என்று பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணியன் சாமி கூறினார்.

சு.சாமி கருத்துக்கு தமிழிசை மறுப்பு
இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சுப்ரமணியன் சாமி கூறியது அவருடைய சொந்த கருத்து. காவிரி நீர் தமிழகத்திற்கு கிடைக்க பாஜக முயல்வதாக தெரிவித்தார்.

ரஜினி, கமல் குரல் கொடுக்க வேண்டும்
சம்பா பயிர் சாகுபடிக்காக டெல்டா விவசாயிகள் காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் காவிரி நீர் கிடைக்குமா, கிடைக்காதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள். இதனிடையே திண்டுக்கல்லி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷால், காவிரி நீர் விவகாரத்தில் ரஜினி, கமல் இருவரும் குரல் கொடுத்தால் நல்லது என்றார்.

கேள்வி எழுப்பலாம்
ஏன் நமக்குரிய பங்கை தர கர்நாடகா மறுக்கிறது என்று இருவரும் கேள்வி எழுப்ப வேண்டும், ஆனால் அவர்கள் ஏன் கருத்து சொல்லவில்லை என்று கேட்கமுடியாது, ஏனெனில் இது அவரவர் விருப்பம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications