நடிகர் சங்க நிலத்தை மோசடி செய்ததாக சரத்குமார், ராதாரவி மீது போலீசில் புகார்... நடிகர் விஷால்
நடிகர் சங்க நிலத்தை மற்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் விற்பனை செய்ததாக சரத்குமார் மற்றும் ராதாரவி மீது புகார் கொடுக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
சென்னை: நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை பொதுக் குழுவில் அனுமதி பெறாமல் விற்பனை செய்த சரத்குமார் மற்றும் ராதாரவி ஆகியோர் மீது புகார் கொடுக்கப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சங்கத்திற்கு சொந்தமான, 26 சென்ட் நிலம், காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே, வேங்கடமங்கலம் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை, சங்க பொதுக்குழு, செயற்குழு ஒப்புதல் பெறாமல் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டிகர் சங்க நிலம் விற்பனை தொடர்பாக, நடிகர்கள், ராதாரவி, சரத்குமார் உட்பட, நான்கு பேர் மீது, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வடக்கு மண்டல, ஐ.ஜி.,யிடம், நடிகர் சங்க பொதுச் செயலர் விஷால் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

இன்று பொதுக் குழு கூட்டம்
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் விஷால் பேசியதாவது: நாங்கள் கொடுத்த வாக்குறுதியிலும் விதிமுறையிலும் எள்ளளவும் மீறவில்லை. எங்களது செயல்பாடுகளில் எந்த ஒரு கெட்ட செயலையும் கண்டுபிடிக்க முடியாது, நல்லதை மட்டுமே காணமுடியும்.

அடுத்த ஆண்டுக்குள்...
அடுத்த டிசம்பருக்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். பொதுமக்கள் பார்வையிட்டு செல்லும் வகையில் கட்டடம் கட்டப்படும். கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளதால் சினிமா தொழில் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. 40 சதவீதம் வரி செலுத்தி சினிமா தொழில் நடத்த முடியாது.

கேளிக்கை வரியை ரத்து செய்ய...
கேளிக்கை வரியை அரசு தரப்பில் இருந்து ரத்து செய்ய நடிகரும், எம்எல்ஏவுமான கருணாஸ் முயற்சிக்க வேண்டும். கேளிக்கை வரியை ரத்து செய்தால் மட்டுமே சினிமா தொழில் நன்றாக இருக்கும். எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் 2 வரிகள் விதிக்கப்படுகின்றன.

சினிமா தொழில் செய்ய இயலாது
40 சதவீதம் வரி செலுத்தி சினிமா தொழில் செய்ய முடியாது. சினிமா தொழில் செயல்பட முடியாத நிலைக்கு செல்வதை தடுக்க கேளிக்கை வரியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். நடிகர் சங்க நிலத்தை மற்ற உறுப்பினர்களின் ஒப்புதல் இன்று விற்பனை செய்ததாக சரத்குமார் மற்றும் ராதாரவி மீது காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்படும். இவ்வாறு விஷால் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications