ஏரி, குளங்களை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும்: நடிகர் விவேக் வேண்டுகோள்
தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைகளுக்கும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் நடிகர் விவேக் பங்கேற்றார். அப்போது மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய அவர், மரம் வளப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.
பின்னர் நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இளைஞர்கள் ஒன்றினைந்தது பாராட்டுக்குரியது.
அதே போல கிராமங்களில் உள்ள ஏரி குளங்களை சுத்தம் செய்வதற்கும் இளைஞர்கள் முன்வர வேண்டும். வர்தா புயலுக்கு பிறகு தான் மரங்களின் அவசியத்தை சென்னை வாசிகள் உணர்ந்துள்ளனர்.
நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்". இவ்வாறு நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் பேசினார்.