திமுகவின் "முன்னணி பேச்சாளர் குஷ்பு" பிரசாரம் செய்ய தடையா?: கருணாநிதி விளக்கம்
சென்னை: தி.மு.க.வின் "முன்னணி பேச்சாளர் குஷ்பு" ஓரம் கட்டப்படுகிறாரா? அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள "கேள்வி-பதில்" வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: தி.மு.க. முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான குஷ்பு தி.மு.க.வில் ஓரம் கட்டப்படுவதாகவும், தேர்தல் பிரசாரம் செய்ய தடை செய்திருப்பதாகவும் செய்தி வருகிறதே?
பதில்: குஷ்பு புறக்கணிக்கப்படவும் இல்லை, தேர்தல் பிரசாரத்திற்குத்தடை விதிக்கப்படவும் இல்லை. தி.மு.க.வின் முன்னணிப்பேச்சாளர்கள் அனைவருமே என்னுடைய சுற்றுப்பயணம் வெளிவருவதற்காகக் காத்திருந்தனர்.
காரணம், எந்தத் தேதியில் நான் எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப்பொறுத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக்கொள்வதற்காகத்தான் தாமதம். தற்போது என்னுடைய சுற்றுப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டு ஏடுகளில் வெளிவந்து விட்டதால், அவர்களின் சுற்றுப் பயணங்கள் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை வெளிவந்துவிடும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications