ஜெ. ஜாமீன் மனு தள்ளுபடி - கமிஷனர் அலுவலகம் முன்பு கவர்ச்சி நடிகை மாயா தீக்குளிக்க முயற்சி

திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நடிகை மாயா. அவர் இன்று மதியம் 12.30 மணியளவில் தனது மகள் குணப்பிரியாவுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
அ.தி.மு.க. பார்டர் போட்ட சேலை அணிந்திருந்த அவர்கள் இருவரையும், அலுவலகத்தின் நுழைவு வாசலிலேயே பெண் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மாயாவிடம் ஒரு பாட்டிலில் மண்ணென்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
எனவே, அதனைப் பறிக்க போலீசார் முயற்சி செய்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வேளையில், திடீரென பாட்டிலில் இருந்த மண்ணென்ணையை தனது உடலில் ஊற்ற முயற்சித்தார் மாயா.
ஆனால், போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து ‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க. அம்மாவை விடுதலை செய்ய வேண்டும்' என கோஷமிட்ட படியே சாலையின் நடுவில் சென்று மாயா படுத்துக் கொண்டார். பின்னர் வேப்பேரி போலீசார் விரைந்து வந்து மாயாவை அழைத்துச் சென்றனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு நடிகை தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications