Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதம் ரூ. 2.50 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும்.. நடிகை ரம்பா குடும்ப கோர்ட்டில் மனு

கணவரிடம் இருந்து மாதம் ஒன்றுக்கு 2.50 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக வேண்டும் என்று நடிகை ரம்பா குடும்ப கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கும் தனது குழந்தைகளுக்கும் மாதம் தோறும் ரூ. 2.50 லட்சம் ஜீவனாம்சமாக வேண்டும் என்று கேட்டு குடும்ப கோர்ட்டில் நடிகை ரம்பா மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னனி நடிகர்களோடு நடித்து பிசியாக இருந்தவர் ரம்பா. இவர் கனடாவில் உள்ள இந்திரகுமார் என்பவரை மணந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர் தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கால் செய்திருந்தார்.

Actress Rambha seeks Rs 2.5 lakh maintenance for children

இதனைத் தொடர்ந்து, தனக்கும் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் மாதம் தோறும் 2.50 லட்சம் ரூபாய் ஜீவனாம்சமாக தனது கணவர் தர உத்தரவிடக் கோரி மற்றொரு மனு ஒன்றை ரம்பா தாக்கல் செய்துள்ளார்.

தான் தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டேன் என்றும், எனவே தனக்கும் தனது 2 பெண் குழந்தைகளுக்குமான படிப்பு செலவு மற்றும் மருத்துவ செலவிற்காக இடைக்கால ஜீவனாம்சமாக மாதந்தோறும் ரூ. 2.50 லட்சம் ரூபாய் தனது கவர் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு டிசம்பர் 3ம் தேதி சென்னை மாவட்ட 2வது கூடுதல் குடும்ப நல கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+