ராம்குமார் கடித்ததாக கூறப்படும் மின்கம்பி இணைப்புகளை ஆய்வு செய்த ஏடிஜிபி விஜயகுமார்!
சென்னை: புழல் சிறையில் ராம்குமார் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட மின்கம்பி இணைப்புகளை ஏடிஜிபி விஜயகுமார் ஆய்வு செய்தார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் இரண்டு தினங்களுக்கு முன் மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் சொல்லப்பட்டது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல் கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஏடிஜிபி விஜயகுமார், புழல் சிறைக்கு சென்று ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையையும் அவர் கடித்தாக சொல்லப்படும் மின்கம்பி இணைப்பையும் ஆய்வு செய்துள்ளார். மேலும் சிறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ராம்குமாருடன் இருந்த சக கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
ஏடிஜிபி விஜயகுமாருடன் மாநில மனித உரிமை ஆணைய கண்காணிப்பாளர் பாஸ்கரனும் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.