அழகிரியின் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி - ஹைகோர்ட்
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கோரி அண்ணா பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பல்கலைக்கழகம் அனுமதி வழங்காமல் இருந்து வருகிறது.
இதையடுத்து மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடக் கோரி கல்லூரி சார்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயா பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது. நடப்பு ஆண்டுக்கான பொறியில் கலந்தாய்வு பட்டியலில் தயா பொறியியல் கல்லூரியின் பெயரை சேர்க்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் முறையாக அனுமதி பெறப்பட்ட கல்லூரிக்கு மாணவர் சேர்க்கை நடத்த இதுவரை அனுமதி வழங்காததை நீதிமன்றம் கண்டித்தது.
இந்த கல்லூரியை கட்டும்போது அழகிரி அருகில் உள்ள கோவில் நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications