ஓபிஎஸ் அணியுடன் இணைவது பற்றி முக்கிய முடிவு.. எடப்பாடி அணியின் மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டம்
ஓபிஎஸ் அணியுடன் இணைவது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் அதிமுக அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் அழைப்புவிடுத்துள்ளார்.
சென்னை: நாளை மறுநாள் அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நாளை சென்னைக்கு வர வேண்டும் என்று அதிமுக அம்மா கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை மற்றும் கட்சியை காப்பாற்றும் வகையில் இரு அணிகளும் இணையும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இன்று மாலை இரு அணிகளின் பேச்சுவார்த்தையும் நடைபெறும் நிலையில், நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications