துணை ஜனாதிபதி தேர்தல்.. வெங்கையா நாயுடுவுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டமி வேட்பாளர் வெங்கையா நாயுடுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் ஆக்ஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து துணை குடியரசு தலைவர் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து இருவரம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதையடுத்து, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணி கூறியிருந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணி எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவளிப்பதாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications