துணை ஜனாதிபதி தேர்தல்.. வெங்கையா நாயுடுவுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டமி வேட்பாளர் வெங்கையா நாயுடுக்கு அதிமுக அம்மா அணி ஆதரவு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதத்தில் முடிவடைகிறது. இதனால் அப்பதவிக்கான தேர்தல் ஆக்ஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் எதிர் கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து துணை குடியரசு தலைவர் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து இருவரம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இதையடுத்து, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணி கூறியிருந்தனர். இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணி எம்.பி-க்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடந்தது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெங்கைய நாயுடுவுக்கு ஆதரவளிப்பதாக இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications