திருச்சி அருகே துவரங்குறிச்சியில் சசிகலா கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் சசிகலாவின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துவரங்குறிச்சி பேருந்து நிலையம் முன்பு சசிகலா உருவ பொம்மை எரிப்பு. முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தை கட்சியை விட்டு நீக்கியதாக சசிகலா அறிவித்தது செல்லாது எனக் கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க கோரியும் அதிமுகவினர் மற்றும் வைத்தியலிங்கம் ஆதரவாளர்கள் திடீர் என சசிகலா உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவோம் என நேற்று வைத்திலிங்கம் கூறியிருந்தார். இதையடுத்து வைத்திலிங்கத்தை நீக்கி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.












Click it and Unblock the Notifications