விஸ்வரூபமெடுக்கும் சசிகலா எதிர்ப்பு: தமிழகத்தில் பல இடங்களில் ஜெ. தீபா பேரவை தொடக்கம்
அதிமுக தொண்டர்களிடையே சசிகலாவுக்கு எதிர்ப்பு தொடருகிறது. பல இடங்களில் அதிமுகவினர் ஜெ.தீபா பேரவையை தொடங்கியுள்ளனர்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. சசிகலா எதிர்ப்பாளர்கள் தமிழகத்தில் பல இடங்களில் ஜெ. தீபா பேரவையை தொடங்கியுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாதான் வர வேண்டும் என அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜெ. தீபா வீட்டு முன்பாக நாள்தோறும் அதிமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.

அவர்களை சந்திக்கும் தீபா, முடிவு அறிவிக்கும் வரை பொறுமையாக இருங்கள் என வேண்டுகோள் விடுத்து வருகிறார். இதனிடையே ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல இடங்களில் ஜெ. தீபா பேரவை தொடங்கப்பட்டுள்ளது. சசிகலாவின் பேனர்கள் கிழித்தெறியப்படுவது தொடருகிறது.
ஜெ. தீபாதான் அதிமுகவின் பொதுச்செயலராக வேண்டும்; ஜெயலலிதாவின் உண்மையான அரசியல் வாரிசு தீபாதான் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள். சசிகலாவுக்கு நாளுக்கு நாள் அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பு வலுத்து விஸ்வரூபமெடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications