புதிய அரசியல் கட்சியை தொடங்க கோரி தீபா வீடு முன்பு இன்றும் திரண்ட அதிமுக தொண்டர்கள்!

புதிய அரசியல் கட்சியை தொடங்க வலியுறுத்தி தீபா வீடு முன்பு இன்றும் அதிமுக தொண்டர்கள் திரண்டனர். எம்ஜிஆர் பிறந்த நாளில் தீபா முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய அரசியல் கட்சியை ஜெ. தீபா தொடங்க வலியுறுத்தி அவரது வீடு முன்பாக இன்றும் அதிமுக தொண்டர்கள் திரண்டனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலராகிவிட்டார் சசிகலா. இதற்கு அதிமுக நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தாலும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ADMK cadres Crowd continues at Deepa's house

தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுக தொண்டர்கள் இணைந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா பெயரில் பேரவைகளை தொடங்கியுள்ளனர். அத்துடன் அவரது வீடு முன்பாக ஒன்று திரண்டு தீபா அரசியலுக்கு வர வேண்டும்; புதிய கட்சியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இன்று மாட்டு பொங்கல் நாளிலும் நூற்றுக்கணக்கானோர் தீபா வீடு முன்பு திரண்டனர். அவர்கள் புதிய அரசியல் கட்சியை தீபா தொடங்கவும் வலியுறுத்தினர்.

இதனிடையே எம்ஜிஆர் பிறந்த நாளான நாளை மறுநாள் ஜெ. தீபா முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+