அமைச்சர் முன்னிலையில் அடித்துக் கொண்ட அதிமுகவினர்- புதுக்கோட்டை கூட்டத்தில் கைகலப்பு!
புதுகை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலையொட்டி நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டதையடுத்து பெரும் பரபரப்பு நிலவியது.
2016 சட்டமன்றத் தேர்தலுக்காக ஒவ்வொரு தொகுதியிலும் பூத் கமிட்டிகளை அமைத்து வருகிறது அதிமுக. இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி தொகுதி கூட்டத்தில் பெரிய பிரச்சனையே கிளம்பியது.
கந்தர்வகோட்டையில் கூட்டம் நடத்தவே சிரமப்பட்டார்கள் மா.செ வைரமுத்து, அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சுப்பிரமணியன் ஆகியோர்.
இந்தநிலையில் தான் இன்று புதுக்கோட்டை தொகுதிக்காண கட்சி நிர்வாகிகள் கூட்டம் புதுக்கோட்டை கட்சி அலுவலகத்தில் மா.செ. வைரமுத்து தலைமையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில் நடந்தது.
கூட்டம் தொங்கி சிறிது நேரத்தில் அதிமுக சீனியர்களான மாஜி கருப்பையாவுக்கும், குமாருக்கும் தங்கள் ஆட்களை பூத் கமிட்டியில் போடவில்லை என்று தொடங்கிய பிரச்சனை பெரிசானது. அடித்துக கொள்ளும் முன்பாக தடுத்துவிட்டார்கள் அதிமுக தொண்டர்கள். எனினும், இந்த கூட்டத்திற்கு கஷ்டப்பட்டு ஏற்பாடு செய்த அமைச்சரும், மாவட்ட செயலாளர்களும் கடும் கவலையில் இருக்கின்றனராம்.