தமிழகத்துக்கு ஜெயலலிதா முக்கியம்.. "அம்மா" மீண்டும் நலம் பெறுவார்.. தொண்டர்கள் பிரார்த்தனை!
சென்னை: தமிழகத்திற்கு முதல்வர் அம்மா ரொம்ப முக்கியம். அம்மா பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்களும், முக்கிய பிரமுகர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை முன்பு தமிழக அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காவிரிப் பிரச்சினையில் தமிழகமே கர்நாடகத்திடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவினால் மட்டுமே காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

காவிரி பிரச்சினை
காவிரிப் பிரச்சினை தொடர்பான ஒவ்வொரு முக்கியச் சம்பவமும் ஜெயலிதா காலத்தில்தான் நடந்துள்ளது. அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் மூலமாகத்தான் காவிரியில் தமிழகத்தின் உரிமை ஒவவொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இப்போது கூட தமிழகத்திற்குப் பெரும் பலன் அளிக்கக் கூடிய காவரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக் காரணம், ஜெயலலிதா அரசு தொடர்ந்த வழக்கே காரணம்.

அம்மா முக்கியம்
காவிரி மட்டுமல்லாமல் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையிலும் கூட ஜெயலலிதாவின் சட்டப் போராட்டம்தான் தமிழகத்திற்கு வெற்றி தேடித் தந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா உடல் நலத்துடன் தெம்போடு இருப்பது அவருக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் முக்கியமானது என்று அதிமுகவினர் உருக்கமாக கூறுகின்றனர்.

பூரண குணமடைவார்
மருத்துவமனை வாசல் முன்பு செய்தி தொடர்பாளர்கள் வைகைச் செல்வன், சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பதிலளித்து வருகின்றனர். ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று நாஞ்சில் சம்பத், சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொண்டர்கள் பிராத்தனை
ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு முதல் மருத்துவமனை வாசலில் குவிந்திருக்கும் தொண்டர்கள் விடிய விடிய ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications