தமிழகத்துக்கு ஜெயலலிதா முக்கியம்.. "அம்மா" மீண்டும் நலம் பெறுவார்.. தொண்டர்கள் பிரார்த்தனை!
சென்னை: தமிழகத்திற்கு முதல்வர் அம்மா ரொம்ப முக்கியம். அம்மா பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்று அதிமுக தொண்டர்களும், முக்கிய பிரமுகர்களும் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனை முன்பு தமிழக அமைச்சர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காவிரிப் பிரச்சினையில் தமிழகமே கர்நாடகத்திடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவினால் மட்டுமே காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நல்லது செய்ய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

காவிரி பிரச்சினை
காவிரிப் பிரச்சினை தொடர்பான ஒவ்வொரு முக்கியச் சம்பவமும் ஜெயலிதா காலத்தில்தான் நடந்துள்ளது. அவர் மேற்கொண்ட சட்டப் போராட்டங்கள் மூலமாகத்தான் காவிரியில் தமிழகத்தின் உரிமை ஒவவொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. இப்போது கூட தமிழகத்திற்குப் பெரும் பலன் அளிக்கக் கூடிய காவரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்கக் காரணம், ஜெயலலிதா அரசு தொடர்ந்த வழக்கே காரணம்.

அம்மா முக்கியம்
காவிரி மட்டுமல்லாமல் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையிலும் கூட ஜெயலலிதாவின் சட்டப் போராட்டம்தான் தமிழகத்திற்கு வெற்றி தேடித் தந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா உடல் நலத்துடன் தெம்போடு இருப்பது அவருக்கு மட்டுமல்ல, அதிமுகவுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்துக்கும் முக்கியமானது என்று அதிமுகவினர் உருக்கமாக கூறுகின்றனர்.

பூரண குணமடைவார்
மருத்துவமனை வாசல் முன்பு செய்தி தொடர்பாளர்கள் வைகைச் செல்வன், சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பதிலளித்து வருகின்றனர். ஜெயலலிதா பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்புவார் என்று வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்று நாஞ்சில் சம்பத், சி.ஆர். சரஸ்வதி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொண்டர்கள் பிராத்தனை
ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றிரவு முதல் மருத்துவமனை வாசலில் குவிந்திருக்கும் தொண்டர்கள் விடிய விடிய ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications