தருமபுரி அதிமுகவில் கொலவெறி கோஷ்டிபூசல்... எதிர்கோஷ்டியிடம் சிக்கிய அமைச்சர் பழனியப்பன்
தருமபுரி: தருமபுரியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் எதிர்கோஷ்டியிடம் சிக்கிய அமைச்சர் பழனியப்பன் படாதபாடுபட்டுவிட்டார்.
தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஜெயலலிதா வருகைக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசத் தொடங்கும்போது, நீ கட்சிக்கு துரோகம் செஞ்சவர்யா என ஒருமையில் ஒரு கோஷ்டி கூச்சல் எழுப்பியது.

அதிர்ச்சியடைந்த பழனியப்பனோ, நீங்க எல்லாம் டி.ஆர்.அன்பழகன் சொல்லித்தான் இப்படி பண்றீங்கனு எனக்கு தெரியும்.. அடிக்கிறதா இருந்தா அடிங்கடா என ஆவேசப்பட்டார்.
உடனே டி.ஆர்.அன்பழகனின் ஆதரவாளர்கள் மேடைக்கு பாய்ந்து பழனியப்பனை சூழ்ந்துகொண்டனர். அங்கிருந்த நாற்காலிகள் பறந்தன.. மைக் வீசி எறியப்பட்டது.
நிலைமை களேபரமாக, உடனே பத்திரிகையாளர்கள் அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் கதவை பூட்டிவிட்டு ரகளைக்கு மத்தியில் ஊழியர் கூட்டத்தை நடத்தினர்.












Click it and Unblock the Notifications