முதல்வரானார் ஜெயலலிதா.. "சியர்ஸ்" சொல்லி டாஸ்மாக் கடைகளில் முண்டியடித்த அதிமுகவினர்..!
கரூர்: தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றுள்ளதை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏதோ திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். இந்த சந்தோஷத்தை டாஸ்மாக் கடைகளில் மது அருந்தி தடபுடலாக கொண்டாடி வருகிறார்கள் அதிமுகவினர். தமிழகத்தில் உள்ள மதுபானக் கடைகளில் மது விற்பனை ஜரூராக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்றுள்ளார். அவருடன் 28 புதிய அமைச்சர்களும் பதவியேற்றனர். இதையொட்டி சென்னை நகரமே நேற்று அல்லோகல்லப்பட்டு விட்டது.

பதவியேற்பு விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க தொண்டர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளதால் சென்னை நகரில் வாகனப் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
நேற்றெல்லாம் சாலையில் போன வாகனங்கள் இருப்பிடம் திரும்புவதற்குள் படாதபாடு பட்டு விட்டது.

இதற்கிடையே ஜெயலலிதா முதல்வரானதை அதிமுகவினர் பல விதங்களில் கொண்டாடி வருகின்றனர். மது பானக் கடைகளிலும் அதிமுகவினர் கூட்டம் படையெடுத்தபடி உள்ளது. பல அதிமுகவினர் ஜெயலலிதாவுக்காக நேர்த்திக்கடன் செலுத்தி மொட்டை போட்டு தலை மீது பூசிய சந்தனம் காய்வதற்குள்ளாகவே கடையைத் தேடி ஓடி வந்த காட்சியையும் தமிழகம் கண்டது.












Click it and Unblock the Notifications