'ரா 3' பிரச்சினையில் அதிமுக வேட்பாளர்.. ஒரு கலகல கதை!
திண்டுக்கல்: திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் உதயகுமார் ஒரு நூதன பிரச்சினையில் சிக்கியுள்ளார். அதாவது ராத்திரியாகி விட்டால் பிரசாரம் செய்வதற்கு ரொம்ப தயங்குகிறாராம்.
இதற்கான காரணம்தான் ரொம்ப சுவாரஸ்யமானது. இவர் ராத்திரியில் பிரசாரம் செய்யப்போகும்போது மின்வெ்ட்டு ஏற்பட்டு, அதையடுத்து 3 விதமான மக்களிடமிருந்து வரும் சரமாரி கேள்விகள்தான் இதற்குக் காரணம்.
இந்தக் காரணங்களால்தான் ராத்திரியில் ஆட்டோவே ஓடாது என்று சொல்லும் அளவுக்கு பம்மிப் பதுங்கி வருகிறாராம்.

மின்சார அமைச்சரின் மாவட்டத்திலேயே கரண்ட் கட்
தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் , குறிப்பாக மின்சாரத்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் திண்டுக்கல் மாவட்டத்திலும் கூட அதிக அளவில் மின் வெட்டு உள்ளதாம்.

விவசாயம்- தொழில் -மாணவர்கள் பாதிப்பு
திடீர் மின் வெட்டு காரணமாக, விவசாயம், தொழில், மாணவர்கள் படிப்பு என பல்வேறு வகையில் பொது மக்கள் பாதிக்கப்படுகின்றார்களாம்.

உதயக்குமார் போகும் நேரம் பார்த்தாப்பா..
வேட்பாளர் உயகுமார் இரவு நேரத்தில் தேர்தல் செய்யும் போது அக்கடி மின் வெட்டு ஏற்படுகின்றதாம். இதனால் அவருக்கு பல தர்மசங்கடங்கள் ஏற்படுகிறதாம்.

பொங்கி வரும் மக்கள்
பிரசாரத்தின்போது கரண்ட் கட் ஆகி விட்டால், அங்கு கூடியிருக்கும் மக்கள், பொங்கி எழுந்து முதலில் தடையில்லா மின்சாரத்தை கொடுங்க, அப்புறமாக எங்ககிட்ட வந்து வாக்கு கேளுங்க,, நாங்களும் ஓட்டு போடுகின்றோம் என வெடிக்கின்றார்களாம்.

பேசாம நைட்டு போகாமலேயே இருந்துட்ட்ட்ட்ட்டா...
இந்த பிரச்சனை காரணாக, இரவு நேரத்தில் பொது மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்தை உயகுமார் விரும்பவில்லையாம்.

விட மாட்டேங்கிறாங்களே..
ஆனாலும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் இரவிலும் பிரசாரம் செய்ய வேண்டும் என்று உதயக்குமாரை அணத்துகிறார்களாம். இதனால் வேறு வழியில்லாமல் அரை மனதோடு பிரசாரம் போகிறாராம்.
என்ன போகும் இடம் எல்லாம் ஒரே ரகளை தானாம் ... அப்பப்பாபா ..... இவ்பவே கண்ணை கட்டுதே என உதயகுமார் புலம்ப ஆரம்பித்துவிட்டராம்...












Click it and Unblock the Notifications