ஒரே நாளில் தமிழகம், கேரளா, புதுச்சேரிக்கான நேர்காணலை நடத்திய ஜெயலலிதா!
சென்னை: அதிமுக சார்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பி விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று ஒரே நாளில் நேர்காணலை நடத்தியதாக அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக அதிமுக, திமுக, பாமக உள்பட பெரும்பான்மையான கட்சிகள் விருப்பமனுத் தாக்கலை முடித்து விட்டன.

அவ்வாறு விருப்பமனுத் தாக்கல் செய்தவர்களிடம் திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தற்போது நேர்காணல் நடத்தி வருகின்றன.
ஆனால், விருப்ப மனுக்களைப் பெற்றதோடு அதிமுக அமைதி காக்கத் தொடங்கியது. நேர்காணல் குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை. ஆனால், ஜெயலலிதா விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று மட்டும் கட்சி வட்டாரத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், அதிமுக சார்பில் இன்று நேர்காணல் நடத்தப்பட்டதாக அதிமுக தலைமைக் கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து ஒரு செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு தமிடிந நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முன்னிலையில் இன்று (6.3.2016 - ஞாயிற்றுக் கிழமை), தமிடிந நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்கள் 16.5.2016 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு செய்திருந்த கழக உடன்பிறப்புகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பல ஆயிரம் பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்த நிலையில் ஒரே நாளில் நேர்காணலை நடத்தியதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்திருப்பது வியப்பளிப்பதாக உள்ளது.
வேட்பாளர் பட்டியலை அதிமுக தயார் செய்து விட்டதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அது வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 10ம் தேதி மற்றும் 11ம் தேதி சுபமூகூர்த்த தினங்களாக இருப்பதால் அன்றைய தினம் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஜெயலலிதாவுக்கு முன்பே அதிமுகவில் இணைந்த நடிகை லதா! அமைச்சராக வேண்டியவர்! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
"அப்படியே ஓடிடுங்க.." தங்கம் அவுட், கேஷ் இன்.! ஆனந்த் சீனிவாசன் சொன்ன மேட்டர் இதுதான் -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை செய்யாத மேனேஜர்களுக்கு கோடிகளில் போனஸ்.. 173 கோடி சம்பளம் வாங்கும் சிஇஓ -
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு












Click it and Unblock the Notifications