'நம்பி ஏமாந்தோம்' நிலைமையில் செந்தில், ராமராஜன், பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி
சென்னை: சட்டசபை தேர்தலில் தங்களுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நடிகர்கள் செந்தில், ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், நடிகைகள் குயிலி, சி.ஆர். சரஸ்வதி, பாத்திமா பாபு, செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி உள்ளிட்டோருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியுள்ளது.
சட்டசபை தேர்தலில் 227 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. 7 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா திங்கட்கிழமை வெளியிட்டார்.

அவர் 100க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் அளிக்கவில்லை. இந்நிலையில் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்பி நடிகர்கள் சிங்கமுத்து, செந்தில், நடிகை பாத்திமா பாபு மற்றும் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் சீட் கேட்டு அதற்காக பணம் கட்டியிருந்தார்கள்.
நடிகர்கள் ராமராஜன், ஆனந்தராஜ், பொன்னம்பலம், நடிகைகள் விந்தியா, குயிலி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் பணம் கட்டாவிட்டாலும் ஜெயலலிதா தங்களுக்கு சீட் கொடுப்பார் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தனர்.
சீட்டை எதிர்பார்த்த திரையுலக பிரபலங்கள் மற்றும் நிர்மலா பெரியசாமி ஆகியோரின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இல்லை. இவர்களை பிரச்சாரத்தோடு நிறுத்திவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications