சேலத்தில் தாய், மகளை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் கைது
சேலம்: சேலத்தில் தாய், மகளை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட லட்சுமாயூரைச் சேர்ந்தவர் முருகன். அவரது 16 வயது மகள் சாந்தி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கிறார். அவரை அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயாலளர் விஸ்வநாதனின் மகன் சாமிநாதன்(17) ஒருதலையாக காதலித்துள்ளார்.
அவரது காதலை ஏற்க மறுத்த சாந்தியின் வீட்டுக்கு சென்றுள்ளார் சாமிநாதன். தனது காதலை ஏற்காவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து அறிந்த விஸ்வநாதன், அவரது மனைவி செல்வி மற்றும் உறவினர்கள் முருகனின் வீ்ட்டுக்கு சென்று சாமிநாதனை வளைத்துப் போட முயற்சிக்கிறீர்களா என்று கூறி சாந்தியையும், அவரது தாயையும் நிர்வாணப்படுத்தி தாக்கினர்.
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து ஓடிவிட்டது. இதையடுத்து சாந்தியும் அவரது தாயும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த 22ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சாமிநாதனை கைது செய்தனர். மேலும் விஸ்வநாதன், அவரது உறவினர் முனுசாமி(38), சேட்டு (35) ஆகிய 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். விஸ்வநாதனின் மனைவி செல்வி மற்றும் வெள்ளையன்(எ) அய்யம்பெருமாளை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications