கொலை மிரட்டல் விடுக்கிறார்: அதிமுக அமைச்சர் மீது ஆளுங்கட்சி நிர்வாகி புகார்
சென்னை: அதிமுக அமைச்சர் சின்னையா கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
தென்சென்னை மாவட்ட அதிமுக நிர்வாகி நங்கநல்லூரைச் சேர்ந்த சரவணன். அவர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
அதிமுக அமைச்சர் டிகேஎம் சின்னையா ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட 4 பேர் என்னிடம் பல லட்சம் ரூபாய் மற்றும் தங்க நகைகளை மோசடி செய்துவிட்டனர். அவற்றை திருப்பி கேட்டபோது, அமைச்சர் சின்னையா உள்ளிட்டோர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும், இது குறித்து பலமுறை காவல் நிலையத்திலும், அதிமுக மேலிடத்திலும் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனது உயிரை காப்பாற்ற வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications