திருச்சியிலேயே 'அம்மா' தொகுதியில்தான் அதிமுகவுக்கு அதிக வாக்குகள்!
சென்னை: திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில்தான் அதிக வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைத்துள்ளதாம்.
இதனால் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவினர், குறிப்பாக நிர்வாகிகள் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியுள்ளனர். பெரும் நிம்மதிப் பெருமூச்சு மட்டுமல்லாமல், அம்மாவின் கோபத்திற்கு ஆகாமல் தப்பி விட்டதாகவும் அவர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
திருச்சியில் கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மிகக் கடுமையாக தேர்தல் பணியாற்றி வந்தனர். இதனால் அதிமுக வேட்பாளர் குமாரின் வெற்றி சந்தேகம்தான் என்று கூட கூறப்பட்டது. ஆனால் குமார் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்று விட்டார்.
அதை விட முக்கியமாக ஜெயலலிதாவின் தொகுதியான ஸ்ரீரங்கத்தில்தான் அதிமுக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாம். அதாவது இங்கு மட்டும் திமுகவை விட 49,012 வாக்குகளை அதிமுக பெற்றுள்ளது. இதனால் அதிமுகவினர் அங்கு குஷியடைந்துள்ளனராம்.












Click it and Unblock the Notifications