எங்களிடம் பெரும்பான்மை இருக்கு.. கோவையில் பதிலடி கொடுத்த எடப்பாடி
அதிமுக அரசுக்கு பெரும்பான்மை உள்ளது என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை: அதிமுக அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என்று கோவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக தெரிவித்தார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வருக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுக அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 109 பேர் கலந்து கொண்டனர். இன்னும் சிலர் அவர்கள் வீட்டு அலுவல் காரணமாக கலந்து கொள்ள இயலவில்லை.
நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தோம். எனினும் நீட் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய சூழலுக்கு தமிழக அரசு தள்ளப்பட்டுள்ளது. நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலை என்று முதல்வர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications