அதிமுக அரசு 3 மாதங்களிலும் கவிழலாம், 3 நாட்களிலும் கவிழலாம்: திருநாவுக்கரசர்
கோவை: அதிமுக அரசு 3 மாதங்களிலும் கவிழலாம், ஏன் 3 நாட்களிலும் கூட கவிழலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

தமிழக முதல்வரும், அமைச்சர்களும் டெல்லிக்கு சென்று கடைசி நேரத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முயற்சி செய்வது மக்களை ஏமாற்றும் வேலை ஆகும்.
தமிழக மாணவர்களின் கல்வித்தரம் உயரும் வரை அவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் பாஜக தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. அப்படி இருந்தும் தமிழக அமைச்சர்கள் பாஜகவுக்கு பயப்படுகிறார்கள் என்றால் அவர்கள் தவறு செய்துள்ளார்கள் என்றே அர்த்தம்.
மேற்கு வங்கம் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் மத்திய அரசை கண்டு பயப்படுத்துவது இல்லை. வருமான வரித்துறையை வைத்தே மத்திய அரசு தமிழக அமைச்சர்களை மிரட்டி பணிய வைத்து வருகிறது.
அதிமுக அரசு 3 மாதங்களிலும் கவிழலாம், ஏன் 3 நாட்களிலும் கூட கவிழலாம். கதிராமங்கலம் பிரச்சனை, டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துவது உள்ளிட்டவற்றை சமாளிக்க தவறிவிட்டது மாநில அரசு. இந்த காரணத்தால் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்தால் அதிமுக அரசு நிச்சயம் கவிழும் என்றார்.












Click it and Unblock the Notifications