வரலாறு படைக்கிறார் ஜெயலலிதா.. மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்கிறது அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து புதிய வரலாறு படைக்கிறார் ஜெயலலிதா. அவரது தலைமையில் முதல் முறையாக ஆட்சியைத் தக்க வைக்கிறது அதிமுக.

தமிழக சட்டசபை வரலாற்றில் எம்.ஜி.ஆர் மட்டுமே தொடர்ந்து 3 முறை ஆட்சியைத் தக்க வைத்துள்ளார். அந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு இதுவரை திமுகவோ, அதிமுகவோ தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்ததில்லை. அந்த வரலாற்றை ஜெயலலிதா மாற்றுகிறார்.

ADMK leads in TN assembly electiin results

சட்டசபைத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கிறது. புதிய வரலாறு படைக்கிறார் ஜெயலலிதா. சட்டசபைத் தேர்தலில் அதிமுக முன்னிலை பெற்று தொடர்ந்து முதலில் இருந்து வருகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலில் தபால் வாக்குகள் எடுக்கப்பட்டன. அதில் ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. அதிமுக 2வது இடத்தில் இருந்து வந்தது.

கடைசியாக வந்த நிலவரப்படி அதிமுக 127 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதேசமயம் திமுக தேக்க நிலைக்குப் போய் விட்டது. தற்போது அது 82 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது.

4 இடங்களில் பாமக முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கு பூஜ்யமே கிடைத்துள்ளது.

அதிமுக மீண்டும் ஆட்சியைத் தக்க வைப்பதால் தமிழகம் எங்கும் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். கொண்டாட்டங்களில் குதித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+