ஊரெல்லாம் அதிமுகவுக்கு வெற்றி.. ஆனால் இங்கு மட்டும் தோல்வி..!
தூத்துக்குடி: உள்ளாட்சி இடைத் தேர்தலில் எங்கு பார்த்தாலும் அதிமுக வெற்றி என்று செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டனம் நகராட்சியின் முதல் வார்டில் நடந்த தேர்தலில் அதிமுக தோல்வியுற்றுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அந்தோணி கிரேசி, 1,16,693 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். 84885 வாக்கு வித்தியாசத்தில் அந்தோணி கிரேஸி வெற்றி பெற்றார். இதேபோல பிற பகுதிகளிலும் கூட பெரும்பாலும் அதிமுகதான் முன்னணியில் உள்ளது. இதனால் அதிமுகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டனத்தில் நடந்த நகராட்சி 1வது வார்டு தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்துள்ளது.
இந்த வார்டில் மொத்தம் 1490 ஓட்டுக்கள் பதிவானது. இதில் சுயேச்சை வேட்பாளர் அஷ்ரத் என்பவர் 1024 ஓட்டுக்கள் பெற்றார். அ.தி.மு.க,. வேட்பாளர் அமலக்கனி வெறும் 466 ஓட்டுக்களேப் பெற்றார். 558 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோற்றதால் அதிமுக புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications