கோடை காலத்திற்கு இதமாக கலகலப்பூட்டும் அதிமுக நடைப்பயணம்.. பாரீர்.. பாரீர்!
சென்னை: கோடை கால வெயிலுக்கு மத்தியில் அதிமுகவினர் நடத்தி வரும் அம்மாவுக்கான நடைப்பயணம், யாகங்கள், பூஜை புனஸ்காரங்கள் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக மாறி வருகின்றன.
காரணம், உண்மையான பக்தியுடன் இதைச் செய்கிறார்களோ இல்லையோ, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அதிமுகவினர் கொடுக்கும் போஸ்கள்தான் வெரைட்டியாக உள்ளன. விதம் விதமாக உள்ளன.

அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு (எதைக் கொண்டு வந்து) மீன்டும் முதல்வரக வேன்டி (எப்படிக் கோர்க்கிறார்கள் பாருங்கள்) வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஏற்பாட்டில் சென்னை பாரிமுனையில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் இருந்து பெசன் நகர் வேளாங்கண்ணி கோவிலுக்கு பாதயத்தைரை நடந்தது.

இதை கழக அவைத் தலைவர் மதுசூதனன் துவக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனர்.

இதில் சர்ச்சுக்குள் ஆளுக்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி கையில் தூக்கி் பிடித்து கேமராக்களைப் பார்த்து சோக முகத்துடன் கொடுத் போஸ்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.. ஜெயலலிதாவே இதைப் பார்த்தால் சிரித்திருப்பார்.












Click it and Unblock the Notifications