For Daily Alerts
Just In
சசிகலா அதிமுக தலைமையை ஏற்க எதிர்ப்பு- கொள்ளிடம் அதிமுகவினர் திமுகவில் ஐக்கியம்
சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் திமுகவில் இணைந்துள்ளனர்.
நாகை: அதிமுக தலைமையை சசிகலா ஏற்க எதிர்ப்பு தெரிவித்து கொள்ளிடத்தில் 42 அதிமுகவினர் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமையை சசிகலா ஏற்க நிர்வாகிகள் வலியுறுத்துகின்றனர். ஆனால் அக்கட்சி தொண்டர்கள் போயஸ் கார்டனுக்கு வெளியே சசிகலாவுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவினர் சிலர் பாஜகவில் இணைந்தனர். தற்போது நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் ஆரப்பள்ளம் ஊராட்சி நரிமுடுக்கு கிராமத்தைச் சேர்ந்த 42 அதிமுகவினர், திமுகவில் இணைந்துள்ளனர்.
கொள்ளிடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக செயலர் நிவேதாமுருகன் முன்னிலையில் திமுகவில் 42 பேரும் இணைந்தனர்.
English summary
ADMK Cadres who opposed Sasikala lead to the paty yesterday joined to DMK.
Story first published: Wednesday, December 14, 2016, 13:23 [IST]